தாராபுரம் அரசு மருத்துவமனையில் திடீர் வெடி சத்தம் - பரபரப்பு!

தாராபுரம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் திடீரென டைல்ஸ் கற்கள் திடீரென வெடித்ததால், அதிர்ச்சியடைந்த நோயாளிகள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 2000க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்நிலையில், நேற்றிரவு அரசு மருத்துவமனையின் முன்பக்க அவசர சிகிச்சை பிரிவில் சிலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென தரையில் ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ் ஒன்று, பலத்த சத்தத்துடன் வெடித்தது.



இதனால், அவசர சிகிச்சை பிரிவில் சுமார் 36 சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், மருத்துவ செவிலியர்கள் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அச்சமடைந்து, அலறியடித்து மருத்துவமனையை விட்டு வெளியேறினர்.

திடீரென ஏற்பட்ட சத்தம் மற்றும் அதிர்வுக்குக் காரணம் பூகம்பமா? நிலநடுக்கமா? என தெரியாமல் அங்கிருந்த அனைவரும் அரசு மருத்துவமனைவளாகத்தை விட்டு வெளியே ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...