தாராபுரத்தில் திமுக நிர்வாகிகள் செயற்குழுக் கூட்டம் - நாளை நடைபெறும் என அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கான செயற்குழு கூட்டம் நாளை நடைபெறும். நாளை காலை 9.30 மணிக்கு குண்டடம் பொடாரம்பாளையம் மணி மண்டபத்தில், குண்டடம் மேற்கு ஒன்றியம், ருத்ராவதி பேரூர் நிர்வாகிகளுக்கான கூட்டம் நடக்கிறது.


திருப்பூர்: தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் இது தொட்ரபாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயற்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கீழ்க்கண்ட இடங்களில் நடக்கிறது. தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நாகராஜன் முன்னிலை வகிக்கிறார்.

நாளை காலை 9.30 மணிக்கு குண்டடம் பொடாரம்பாளையம் மணி மண்டபத்தில், குண்டடம் மேற்கு ஒன்றியம், ருத்ராவதி பேரூர் நிர்வாகிகளுக்கான கூட்டம் நடக்கிறது.

காலை 11.30 மணிக்கு தாராபுரம் சிவரஞ்சனி திருமண மண்டபத்தில், தாராபுரம் நகரம், தாராபுரம் ஒன்றியம், சின்னக்காம்பாளையம் பேரூர், கொளத்துப்பாளையம் பேரூர் நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது.

மதியம் 2 மணிக்கு மூலனூர் எஸ்.ஜே.எம். திருமண மண்டபத்தில், மூலனூர் கிழக்கு ஒன்றியம், மூலனூர் மேற்கு ஒன்றியம், கன்னிவாடி பேரூர், மூலனூர் பேரூர் நிர்வாகிகளுக்கான கூட்டம் நடக்கிறது.

இந்தக் கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் உள்ள நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...