தாராபுரத்தில் திமுக நிர்வாகிகள் செயற்குழுக் கூட்டம் - நாளை நடைபெறும் என அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கான செயற்குழு கூட்டம் நாளை நடைபெறும். நாளை காலை 9.30 மணிக்கு குண்டடம் பொடாரம்பாளையம் மணி மண்டபத்தில், குண்டடம் மேற்கு ஒன்றியம், ருத்ராவதி பேரூர் நிர்வாகிகளுக்கான கூட்டம் நடக்கிறது.


திருப்பூர்: தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் இது தொட்ரபாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயற்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கீழ்க்கண்ட இடங்களில் நடக்கிறது. தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நாகராஜன் முன்னிலை வகிக்கிறார்.

நாளை காலை 9.30 மணிக்கு குண்டடம் பொடாரம்பாளையம் மணி மண்டபத்தில், குண்டடம் மேற்கு ஒன்றியம், ருத்ராவதி பேரூர் நிர்வாகிகளுக்கான கூட்டம் நடக்கிறது.

காலை 11.30 மணிக்கு தாராபுரம் சிவரஞ்சனி திருமண மண்டபத்தில், தாராபுரம் நகரம், தாராபுரம் ஒன்றியம், சின்னக்காம்பாளையம் பேரூர், கொளத்துப்பாளையம் பேரூர் நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது.

மதியம் 2 மணிக்கு மூலனூர் எஸ்.ஜே.எம். திருமண மண்டபத்தில், மூலனூர் கிழக்கு ஒன்றியம், மூலனூர் மேற்கு ஒன்றியம், கன்னிவாடி பேரூர், மூலனூர் பேரூர் நிர்வாகிகளுக்கான கூட்டம் நடக்கிறது.

இந்தக் கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் உள்ள நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...