தாராபுரம் அருகே வனப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை - மூலனூருக்கு இடம்பெயர்ந்ததாக வனத்துறை தகவல்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகிலுள்ள ஊதியூர் வனப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக பதுங்கி இருந்த சிறுத்தை, மூலனூர் பகுதியை நோக்கி இடம் பெயர்ந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்துள்ள ஊதியூர் வனப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக பதுங்கியிருந்த சிறுத்தை, விவசாய தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்கள், கால்நடைகளை அடித்துக்கொன்று சாப்பிட்டு வந்தது.

இதையடுத்து, அப்பகுதியில் வனத்துறையினர் 30 கண்காணிப்பு கேமராக்கள், 4 கூண்டுகள் வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், சிறுத்தை குறித்த காட்சிகள் கேமராக்களில் பதிவாகதாதோடு, கூண்டிலும் சிக்கவில்லை.

இருப்பினும், சிறுத்தை அடிக்கடி வந்து போகும் இடத்தை கண்டுபிடித்து அப்பகுதியில் கூண்டுகள் வைத்து பிடிக்கவும், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டும் சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கண்காணிப்பு கேமராக்களை பல்வேறு இடங்களுக்கு மாற்றி வைத்தபோதும், சிறுத்தை கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும் இடத்தை விடுத்து மற்ற இடங்களில் சுற்றி வருகிறது. இதனால் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறிவருகின்றனர்.

ஊதியூர் வனப்பகுதியில் சுமார் ஒரு மாதமாக சுற்றித்திரியும் சிறுத்தையால், ஊதியூர் மலையடிவார பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், மூலனூர் அருகே பெரமியம் என்ற பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் நேற்று காலை 6.30 மணியளவில் பொன்னுசாமி என்ற விவசாயி சிறுத்தை சென்றதை பார்த்ததாகத் தெரிகிறது.

அதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், காங்கயம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பதிவான கால்தடங்களை ஆய்வு செய்தனர். அதில், சிறுத்தையின் கால்தடம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து காங்கயம் வனத்துறை அலுவலர் தனபாலன் கூறுகையில், ஊதியூர் மலையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூலனூர் அருகே பெரமியம் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் நேற்று சிறுத்தையை விவசாயி ஒருவர் பார்த்துள்ளார். அங்கு சிறுத்தை கால்தடம் உறுதி செய்யப்பட்டது. ஆனால் சிறுத்தை குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

ஒருவேளை சிறுத்தை எங்காவது பதுங்கி இருந்து இரவு நேரத்தில் வெளியே வந்து இடம்பெயர வாய்ப்புள்ளது. சிறுத்தையின் கால்தடம் இருந்த திசையை பார்க்கும்போது அது மேற்கு பகுதியை நோக்கி சென்றுள்ளது. அதாவது ஊதியூர் வனப்பகுதியை நோக்கி மீண்டும் செல்ல வாய்ப்புள்ளது, என்றார்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...