பல்லடத்தில் பள்ளி வேன் மீது லாரி மோதல் - இரண்டு மாணவிகள் காயம்

பல்லடத்தில் 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற வேன் மீது சென்னையிலிருந்து குளிர்பானங்களை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 2 பள்ளி மாணவிகள் படுகாயமடைந்தனர்.


திருப்பூர்: பல்லடத்தில் பள்ளி வேன் மீது லாரி மோதிய விபத்தில், இரண்டு மாணவிகள் காயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 30 மாணவ-மாணவிகள் இன்று பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றனர்.



வேன் திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெருமாள் கோவில் அருகே சென்றபோது சென்னையிலிருந்து குளிர்பானங்களை ஏற்றிக்கொண்டு பல்லடம் நோக்கி வந்த லாரி பள்ளி வேன் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் வேனில் பயணித்த இரண்டு மாணவிகள் படுகாயமடைந்தனர்.

அருகிலிருந்தவர்கள் காயமடைந்த மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் போக்குவரத்து சரிசெய்து விபத்து உண்டான லாரி ஓட்டுநர் ராஜா என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...