தாராபுரத்தில் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை - கூட்டுறவு மத்திய வங்கி அதிகாரி வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை!

தாராபுரத்தில் கூட்டுறவு மத்திய வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து, தங்கம், வெள்ளி உட்பட 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அசோக் நகர் பகுதியில் உள்ள ஆறாவது வீதியில் செல்லமுத்து என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் குண்டடம் மத்திய கூட்டுறவு வங்கியில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா, நிலவள வங்கியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்.



மேலும் இவர் நேற்று மத்திய கூட்டுறவு வங்கிக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வரும்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ஒன்பது பவுன் நகை, வைர கம்மல், ஒரு லட்சம் மதிப்புள்ள நகைகள், மேலும் மூன்று லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.



இதுகுறித்து செல்லமுத்து தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் தாராபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...