கோவையில் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் பறிமுதல் - இளைஞர்கள் 3 பேர் கைது

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் இரவு நேரத்தில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்துவந்த யாசின், அன்வர் சாதிக், சுல்தான் பாஷா என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.



கோவை: கோவை மாநகரில் போதை பொருள் புழக்கத்தை தடுப்பதற்காக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சில இளைஞர்கள் போதை மாத்திரை விற்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

அதன்பேரில், போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்திய நிலையில் மசக்காளிபாளையம் பகுதியில் கார்ப்பரேஷன் பள்ளி அருகே சந்தேகத்துக்கு இடமாக மூன்று இளைஞர்கள் நின்றிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்தபோது, போதைக்காக மாத்திரைகளை விற்று வருவது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் மூன்று பேரும், இறைச்சிக் கடையில் வேலை பார்க்கும் ரத்தினபுரி பகுதியைச் சார்ந்த ஷாம் என்கிற யாசின் (வயது28) , ஓட்டுனராக பணியாற்றி வரும் போத்தனூரைச் சார்ந்த அன்வர் சாதிக் (வயது28), பெயிண்டிங் வேலை பார்க்கின்ற சாரமேடு பகுதியைச் சார்ந்த சுல்தான் பாஷா (வயது27) என்பது உறுதியானது.

இதையடுத்து, சிங்காநல்லூர் போலீசார் இவர்களை உடனடியாக கைது செய்து, அவர்களிடமிருந்து டேபண்டடால் 100 எம் ஜி 168 மாத்திரைகள், டேபண்டடால் 50 எம் ஜி 190 மாத்திரைகள், மாத்திரைகளை கலக்க பயன்படுத்தும் சோடியம் குளோரைடு இன்ஜெக்சன் பிளாடிக் பாட்டில் 32 , பயன்படுத்தப்பட்ட ஊசி 10, பயன்படுத்தப்படாத ஊசி 14 உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், போதைக்காக மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டு அதிரடியாக சிறையில் அடைக்கப்பட்டனர். சமூகத்தில் தீங்கை தரும் போதை பொருட்களை விற்போர் மீது சட்டப்படின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸார் எச்சரிக்கை மணி அடித்திருக்கின்றனர் .

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...