உக்கடத்தில் வீட்டில் பதுங்கியிருந்த 5 அடி நீள நாகபாம்பை பிடித்த சினேக் அமீன்

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் வீட்டில் மறைந்திருந்த 5 நீளம் கொண்ட நாகபாம்பை பாம்புபிடி வீரர் சினேக் அமீன் பத்திரமாக மீட்டு, வனச்சரகர் சந்தியா உதவியோடு பெரியகுளக்கரையில் விடப்பட்டது.


கோவை: உக்கடம் பகுதியில் வீட்டில் பதுங்கியிருந்த நாகபாம்பை பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது.

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள ரோஸ்கார்டன் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் பாம்பு இருப்பதாக கிரீன்கேர் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பாம்புபிடி வீரரான சினேக்அமீன் உதவியுடன் கிரீன்கேர் அமைப்பினர் அந்த வீட்டிற்குச் சென்று சோதனை செய்த போது, பழைய பொருட்களைச் போட்டு வைத்திருந்த இடத்தில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள நாகப் பாம்பை பத்திரமாக மீட்டார். பின்னர் மதுக்கரை வனச்சரகர் சந்தியாவிற்க்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் பாம்பை உக்கடம் பெரியகுள கரைப்பகுதியில் விட்டார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...