ஆவினில் வேலைவாங்கி தருவதாக மோசடி - கோவை ஆவின் மேலாளர் பணியிடை நீக்கம்

ஆவினின் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில், கோவை மாவட்ட ஆவின் மேலாளரான சகாயம் என்பவரை ஆவின் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.


கோவை: ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மேலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குமரி மாவட்டம் பேயோடு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நான் பேயோடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளேன். நான் பணியில் இருந்த காலகட்டங்களில் வேலை நிமித்தமாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்துக்கு (ஆவின்) செல்வது வழக்கம்.

இதன் மூலம் அங்குள்ள அலுவலர்களுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. அதன்படி அந்த அலுவலகத்தில் இளநிலை செயலாளராக இருந்த ஐயப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர், புதுக்கோட்டை மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியத்தில் மேலாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், ரூ.30 லட்சம் தந்தால் எனது மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகவும் கூறினார்.

அந்த சமயத்தில் ஆவின் அலுவலகத்தில் பணியாற்றும், மேலும் சிலரும் நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினர். அவர்களின் பேச்சை நம்பி பல்வேறு தவணைகளாக ரூ.30 லட்சம் வரை தந்தேன்.

இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதியன்று, புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இந்த பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் எனது மகன் பிரசாந்த் பங்கு பெற்று எழுத்துத் தேர்வு எழுதினான். வேலைக்கான உத்தரவு வந்துவிடும் என்றனர்.

கொரோனா காலகட்டமாக இருந்ததால் தாமதம் ஆவதாக கூறினர். ஆனால் வேலைக்கான உத்தரவு வரவில்லை. இதையடுத்து நான் சம்பத்தப்பட்டவர்களிடம் பணத்தை திரும்ப கேட்க தொடங்கினேன். தற்போது வரை பணம் தரவில்லை. இந்த நிலையில் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்தால் கூலிப்படையை வைத்து கொன்று விடுவதாக மிரட்டுகிறார்கள்.

இதனால் என்னை ஏமாற்றி ரூ.30 லட்சம் வரை மோசடி செய்ததுடன், கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பணத்தையும் மீட்டு தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

இதன் பெயரில் கன்னியாகுமரி மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றிய இளநிலை செயலாளர் ஐயப்பன், கோவை மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொறியியல் பிரிவு துணை மேலாளர் சகாயம், கன்னியாகுமரி மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றிய இளநிலை செயலாளர் பழனி, நாகர்கோயில் ராமவர்மபுரத்தைச் சார்ந்த சரஸ்வதி உள்ளிட்ட நான்கு பேர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆவின் மேலாளராக பணி பெற்று லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக வழக்குப்பதியப்பட்ட நபர்களில் ஒருவரான சகாயம், கோயம்புத்தூர் மாவட்ட ஆவின் நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றார். ஆவின் நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றது.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...