கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.110.90 கோடி மதிப்பில் பன்னடுக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பல்வேறு சிகிச்சை பிரிவுகளையும் ஆய்வு செய்தார்.


கோவை: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டார்.



கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பன்னடுக்கு மருத்துவமனை கட்டிட பணிகள் ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன் ரூ.110.90 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

இதில் 250 படுக்கை வசதி, 12 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் நவீன ஆய்வகங்கள் அமையவுள்ளது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

மேலும், மழை பெய்யும் போது மருத்துவமனை நுழைவாயிலில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பல்வேறு சிகிச்சை பிரிவுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர், மருத்துவக்கல்லூரி மாணவியர்கள் தங்கும் விடுதி மற்றும் கல்லூரியின் பின்புறம் உள்ள பகுதிகளில் சுற்றுச்சுவர் அமைப்பது தொடர்பாகவும், மருத்துவமனை முதல்வரிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் உட்பட மருத்துவர்கள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...