கனிம வளங்கள் கடத்தலை தடுத்திடுக..! - கிணத்துக்கடவில் பாஜகவினர் போராட்டம்!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரியிலிருந்து கனிம வளங்களை கடத்தப்படுவதை தடுக்ககோரி பாஜகவினர் திடீர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கிணத்துக்கடவு பகுதியில் கனிம வளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் கல்குவாரியில் இருந்து சட்ட விரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும், கனிமவளங்களை கடத்திச் செல்லும் வாகனங்களால் சாலைகள் சேதம் அடைந்து வருவதாகவும் கூறி அப்பகுதி விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பத்தாம் நெம்பர் முத்தூர் பகுதியில் கல்குவாரிகள் குறித்து செய்தி சேகரித்து சென்ற தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை கல்குவாரி உரிமையாளர்கள் தாக்கியுள்ளனர்.

இதுச்சம்பவம் தொடர்பாக கல்குவாரி உரிமையாளர் சிவப்பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



இந்த நிலையில் இன்று கல்குவாரியிலிருந்து சட்ட விரோதமாக கனிம வளங்களை கடத்தப்படுவதை தடுக்ககோரி மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து சம்பவ அறிந்து சென்ற போலீசார் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததால் பாஜகவினர் போராட்டத்தை கைவிட்டனர்.

பாஜகவினர் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Newsletter

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...