கல்வி உரிமைச்சட்ட இணையதளம் செயலிழப்பு - சேர்க்கை விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சிக்கல்!

தமிழக அரசின் கல்வி உரிமை சட்ட இணைதளம் செயலிழந்துள்ளதால், கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல் பெற்றோர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் தரமான கல்வியைப் பெறும் வகையில், தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுவருகின்றனர்.

இத்திட்டத்தில் எல்.கே.ஜி மற்றும் முதல் வகுப்புக்கான சேர்க்கைகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் சேரும் குழந்தைகள் 8ம் வகுப்பு படிக்கும் வரை ஆகும் செலவை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்கின்றன.

அந்த வகையில், 2023-24 ஆம் ஆண்டுக்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கைக்கான RTE விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்க மார்ச் 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை காலக்கெடு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக RTE இணையதளம் செயலிழந்துள்ளதாகவும், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்ற முடியவில்லை எனவும் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.



முதல் கட்ட சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவேற்ற நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், இணையதளம் செயலிழப்பால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு கால நீட்டிப்பு வழங்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...