ஆதியோகி சிலை திறப்பு விழாவில் மோடி பங்கேற்பதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் கழகத்தினர் கைது.

கோவையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள ஈஷாவின் ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் கழகத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம், போளுவாம்பட்டி அருகே மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலையினை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற பிப்ரவரி 24-ம் தேதியன்று கோவைக்கு வருகை தரவுள்ளார்.

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட இந்த சிலையின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புரட்சிகர இளைஞர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெறும் 100 சதுர அடிக்கு மட்டும் உள்ளூர் பஞ்சாயத்திடம் அனுமதி பெற்றுக்கொண்டு, 4 லட்சம் சதுர அடிக்கு விதிமுறைகளை மீறி ஆதியோகி சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள சிலை திறப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்வது சரியான முன்னுதாரனமாக இருக்காது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் கழகத்தைச் சேர்ந்த 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...