பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் குழு!

ஆஸ்கர் விருது பெற்ற தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்தின் இயக்குநர் கார்த்தகி கோன்சால்வெசு மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர், டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.



கோவை: முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி குறித்து தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படம் எடுக்கப்பட்டது. இந்த குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்தின் இந்த ஆவணப்படத்தை இயக்கிய கார்த்திகி கான்சால்வேஸ் மற்றும் தயாரித்த குனித் மோங்கா ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டனர்.

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படம், முதுமலை தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது. அனாதை யானையான ரகுவின் கதை. இந்த யானையை பொம்மா மற்றும் பெள்ளி என்ற தம்பதி பராமரித்து வந்தனர்.

இந்த ஆவணபடத்தில் யானை மற்றும் தம்பதியிடையேயான உறவு மற்றும் பாசப்பிணைப்பு மட்டும் படமாக்கப்படவில்லை. சுற்றியிருந்த இயற்கைச்சூழலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.



இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வெசு மற்றும் தாயாரிப்பாளர் குனீத் மோங்கா பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இதற்கு முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, இருவரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழக அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...