ஆன்லைன் ரம்மி விவகாரம்: பொள்ளாச்சியில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிராகரிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து பொள்ளாச்சியில் மக்கள் விடுதலை முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநரின் உருவப் படத்தை கிழித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்த அவர்களை போலீசார் கைது செய்தனர்.


பொள்ளாச்சி: ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்ட மசோதாவை நிராகரிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து பொள்ளாச்சி அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த மசோதாக்களை தொடர்ந்து நிராகரித்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் தமிழ்நாடு ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.



இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மக்கள் விடுதலை முன்னணியினர் பொள்ளாச்சி மத்திய தொலைபேசி நிலைய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆளுநர் ரவியின் உருவப்படத்தை கிழித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் ஆளுநர் ரவி உடனடியாக தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டும் எனவும், ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும் கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.



பின்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட மக்கள் விடுதலை முன்னணியினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...