தென்னையை அழிக்கும் கருந்தலைப் புழுக்கள் - கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!

கோவை, சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை மரங்களில் கருந்தலைப் புழுத் தாக்குதலைத் தடுத்து நிறுத்த போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: "தென்னைய பெத்தா இளநீரு, பிள்ளைய பெத்தா கண்ணீரு" என்ற பாடல் வரியை பொய்யாக்கியுள்ளது இந்தக் கருந்தலைப் புழு. தென்னையை பெத்தாலும் தற்போது கண்ணீர் என்று வேதனையில் உள்ளனர் கோவையை சேர்ந்த தென்னை விவசாயிகள்... காரணம் இந்தக் கருந்தழை புழு தாக்குதல்தான்.



தென்னை மரங்களின் இலைகளில் உள்ள பச்சையத்தை மட்டுமே உணவாக உட்கொண்டு, ஒரு இலை தொடங்கி மரங்கள் வரை அழித்து வளரும் புழுதான் இந்த கருந்தாலைப் புழு. சிறிய முட்டை வடிவத்தில் தோன்றி, பல்கி பெருகி காற்று செல்லும் திசையெல்லாம் கண்டம் விட்டு கண்டம் தாவுவதுபோல் ஒரு தோப்பில் உள்ள ஒரு தென்னை மரத்தைக்கூட விட்டுவிடாமல் பரவி அழிக்கும் இந்த கருந்தாலைப் புழு என்னும் கொடிய அரக்கனை கண்டு பயந்து நடுங்குகின்றனர் கோவை விவசாயிகள்.



குறிப்பாக, சூலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கணியூர் சுற்று வட்டாரம் முழுவதிலும் உள்ள தென்னந்தோப்புகள் அனைத்தும் இந்த கருந்தழை புழு தாக்குதாலால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.



இந்த புழுத் தாக்குதலால் தென்னை மரங்கள் கருகி நிற்கின்றன. வெள்ளை ஈ தாக்குதல் போன்றே இதன் தாக்குதல் வியூகமும் இருப்பதால் வெள்ளை ஈதான் தாக்கியுள்ளது என்று நினைத்து அதற்கான ஒட்டுண்ணிகளை வைத்து அழிக்க நினைத்த விவசாயிகளுக்கு பின்புதான் தெரிந்தது இது வெள்ளை ஈ இல்லை.. கருந்தழை புழு என்பது...

இது குறித்து வேளான் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தபோதும், துரிதமான நடவடிக்கை எடுப்படவில்லை என்றும், அவர்கள் அளித்த ஒட்டுண்ணியால் எந்த பலனும் கிடைக்கவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

தேங்காய்க்கு விலை இல்லை, கொப்பரைக்கு விலை இல்லை என சிறுசிறு இடிகளை தாங்கிவந்த தங்களின் தலையில் தற்போது பேரிடியாக விழுந்துள்ளது இந்த கருந்தழை புழு தாக்குதல் என்கின்றனர் விவசாயிகள்.



தாக்குதலுக்குள்ளான தென்னை மரங்களில் குருத்து வெடிக்காமல் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்படும் மகசூல் குறைந்து தென்னையை பிரதானமாக கொண்டு இயங்கும் தேங்காய், மட்டை, நார் சார்ந்த தொழில்கள் முடங்கும் என்றும் தென்னை விவசாயிகள் மட்டுமல்லாது இதனை நம்பியுள்ள அனைத்து தொழில்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்த கருந்தலைப் புழுத் தாக்குதலுக்கு காரணம், பருவகால மாற்றமா? பூச்சிக்கொல்லி மருந்துகளா? தொழிற்சாலை கழிவுகளா? எனத் தெரியாமல் விழி பிதுங்கியுள்ளனர் விவசாயிகள். கோடை காலத்தில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க இந்த கருந்தலைப் புழுதாக்குதல் அதிகளவில் இருக்கும்.

தமிழக அரசும், வேளாண் துறையும் உடனடியாக இந்த தாக்குதல் குறித்து நேரடி கள ஆய்வு செய்து, பாதிப்பு அதிகரிக்கும் முன்பே தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.



மேலும், கருந்தலைப் புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்னை விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு, தென்னை விவசாயிகளின் துயர் துடைக்குமா? பொருத்திருந்து பார்ப்போம்..

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...