ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்


புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டதிற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும், தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சேலம் மற்றும் ஈரோடு பகுதிகளில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், வர்தா புயலுக்கு மத்திய அரசு இதுவரை நிவாரணம் எதுவும் வழங்கவில்லை. தற்போது தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி போதுமானதாக இல்லை என தெரிவித்தார்.

மேலும், புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பது கண்டிக்கத்தக்கது எனவும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 25 ஆண்டுகளுக்கு பின்பு டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் எனவும் குறிப்பிட்டதுடன் மத்திய அரசு அனுமதியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் அதற்காக தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், ஆணவ கொலைகள் தடுப்பு சட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட திருமாவளவன், தருமபுரி இளவரசன் வழக்கு சிபிசிஐடி-க்கு கொடுக்கப்பட்ட போதே இந்த முடிவை தாங்கள் எதிர்பார்த்ததாகவும், தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டிற்கு  செல்ல வேண்டும் என்பதே தங்களின் கருத்து எனவும் கூறினார்.

சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு என்பது அவை விதிகளில் இல்லை என சொல்லப்பட்டாலும், சட்டப்பேரவை தலைவர் எதிர்கட்சி தலைவரின் கோரிக்கையை நிறைவேற்றி இருக்கலாம் எனவும், சட்டமன்றத்தில் சபாநாயகர் சாதியின் அடிப்படையில் இழிவுபடுத்தப்பட்ட நிகழ்வு நடைபெற்று இருந்தால் தமிழக முதலமைச்சர் அதை வெளிப்படையாக கூற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியதுடன், முதலமைச்சர் ஏன் இது குறித்து எதுவும் பேசவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...