அடிப்படை வசதிகள் செய்து தராமல் புறக்கணிப்பு -கோவை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் மேயரிடம் மனு!

கோவை காளப்பட்டி பெரியார் நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராமல் புறக்கணித்து வரும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. உடனடியாக மனு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் உறுதியளித்தது.


கோவை: கோவை காளப்பட்டி பெரியார் நகரில் அடிப்படை வசதிகளை செய்து தராமல் புறக்கணிப்பதாக பொதுமக்கள் மேயரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட காளப்பட்டி பெரியார் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக எந்த வித அடிப்படை வசதியும் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 37 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும், அதுவும் முறையான பராமரிப்பின்றி தற்போது மோசமான நிலையில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.



இதேபோல், வடிகால் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லை எனக் கூறி, இப்பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தனர்.

இதனையடுத்து பேசிய அப்பகுதி மக்கள், தங்களது பகுதியில் உள்ள அரசு நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் 3 முறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில், அடிப்படை வசதி மற்றும் ஆக்கிரமிப்பு பிரச்சனை உள்ளிட்ட அனைத்திற்கும் தீர்வு காண வலியுறுத்தி மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் மனு அளித்த காளப்பட்டி பெரியார் நகர் பகுதி மக்களிடம், மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

Newsletter

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...

தொண்டாமுத்தூரில் AIADMK வேலுமணி வேட்புமனு: அண்ணாமலை உடன் தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் S.P. வேலுமணி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். BJP முன்னாள் மாந...

தொண்டாமுத்தூர்: N.R. கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் N.R. கார்த்திகேயன், பேரூர் தாலுக்கா அலுவலகத்தில் வேட...

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...