வால்பாறை நகராட்சி கூட்டம் - கோடை விழா உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த வார்டு உறுப்பினர்கள்!

கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட வார்டு கவுன்சிலர்கள், மே மாதம் கோடை விழா நடத்த வேண்டும், காட்சி முனை மாடம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.



கோவை: வால்பாறை நகராட்சி கூட்டத்தில் கோடை விழா நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி கூட்டம் தலைவர் அழகுசுந்தரம் வள்ளி, துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில், ஆணையாளர் பாலு முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 21 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வட்டார் பால்ஷ் மற்றும் வேவர்லி பகுதியில் சுற்றுலா பயணிகள் பார்வையிட காட்சி முனை மாடம் அமைக்க வேண்டும், அனைத்து வார்டு பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், ரேஷன் கடைகளை பராமரிப்பு செய்து தர வேண்டும்,

தெரு விளக்கு பராமரிப்பு பணியை மேற்கொள்ள கூடுதல் மின் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். வரும் மே மாதம் கோடை விழா நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



இதேபோல், பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்து யானைகள் சேதப்படுத்திய சத்துணவு மையங்களை சரி செய்து தர வேண்டும், நகராட்சி மார்க்கெட் கடைக்காரர்களுக்கு வாடகை. பொதுமக்களின் வீட்டு வரியை 50% குறைக்க வேண்டும் நல்லமுடி பூஞ்சோலை சுற்றுலா தளத்தில் வாகன நிறுத்துமிடம், கழிப்பிட வசதி செய்து தர வேண்டும்.

நெடுஞ்சாலை துறையில் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்ட கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வார்டு உறுப்பினர்கள் சார்பில் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, வாட்டர் பால்ஸ் அரசு உயர்நிலைப்பள்ளி, சோலையார் நகர் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கு சமையல் கூடம் கட்டுதல், மேலாண்மை திட்டம் விரிவாக்க பணியை மேற்கொள்ளுதல்.

தடுப்பு சுவர் கட்டுதல் கழிப்பிட பராமரிப்பு, சத்துணவு மைய பராமரிப்பு, சிறு பாலம் கட்டுதல், கிணறு அமைத்தல். கழிவு நீர் வடிகால் அமைத்தல், குடிநீர் குழாய் பராமரித்தல், பயணிகள் நிழற்குடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...