ராகுல் காந்தி விவகாரம்: தாராபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து போராட்டம்!

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தாராபுரம் காந்தி சிலை முன்பு மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டம்.


திருப்பூர்: திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி எம்.பி பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து, தாராபுரம் காந்தி சிலை முன்பு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து முன்னிலையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.



இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அநீதியானது என்றும், அதனை காரணம் காட்டி காந்தியை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ள ஒன்றிய அரசின் சர்வாதிகார நடவடிக்கை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என குற்றம் சாட்டப்பட்டது.



காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்பு நிர்வாகிகள், கட்சியின் முன்னணி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் விசிக, எஸ்டிபிஐ, திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆழியாறு அணையில் 59.65 அடி,...