முன்விரோதம் காரணமாக கோவை மாநகராட்சி ஊழியருக்கு கத்திக்குத்து - 2 இளைஞர்கள் கைது!

தொண்டாமுத்தூரை சேர்ந்த மாநகராட்சி ஊழியரிடம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர், ஆத்திரமடைந்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நிலையில், திண்டுக்கலில் பதுங்கியிருந்த இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


கோவை: தொண்டாமுத்தூர் அருகே மாநகராட்சி ஊழியரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞர்கள் இருவரை போலீசார் திண்டுக்கலில் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த நரசீபுரத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மகன் சபரிநாதன் (23). இவர் கோவை மாநகராட்சி தெற்கில் குடிநீர் திறப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அவர் குனியமுத்தூர் பி.கே.புதூரில் உள்ள மதுரை வீரன் கோவில் அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த 2 இளைஞர்கள் சபரிநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து சபரிநாதனை கத்தியால் குத்தினர். அதில், இடுப்பு, வயிறு, மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த சபரிநாதன், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், முன்விரோதம் காரணமாக குடிபோதையில் இந்த கத்தி குத்து சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிகிறது.

மேலும், சபரிநாதனை கத்தியால் குத்தியது அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கிறிஸ்டோபர், வினித் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் திண்டுக்கல் மாவட்டத்தில் பதுங்கி இருந்த இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

நினைத்ததை சாதிக்கும் செயல்வீரர் செந்திலபாலாஜி - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கோவையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மின்துறை அம...

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...