கோவையில் ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவி கடத்தல்! - கல்லூரி மாணவர் போக்சோவில் கைது!

கோவை சூலூரில் 11ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவியை, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற காங்கயம்பாளையம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரியை தனிப்படை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.


கோவை: சூலூரில் பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே காங்கயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் ஹரி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளிக்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரின் பெற்றோர் சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சூலூர் போலீசார் தனிப்படை அமைத்து பள்ளி மாணவியைத் தேடி வந்தனர்.

அப்போது, கோவை பீளமேடு பேருந்து நிலையத்தில் இருவரும் நிற்பதை கண்ட தனிப்படை போலீசார், உடனடியாக அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவர் அழைத்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஹரியை கைது செய்த சூலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...