கோவையில் ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவி கடத்தல்! - கல்லூரி மாணவர் போக்சோவில் கைது!

கோவை சூலூரில் 11ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவியை, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற காங்கயம்பாளையம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரியை தனிப்படை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.


கோவை: சூலூரில் பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே காங்கயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் ஹரி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளிக்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரின் பெற்றோர் சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சூலூர் போலீசார் தனிப்படை அமைத்து பள்ளி மாணவியைத் தேடி வந்தனர்.

அப்போது, கோவை பீளமேடு பேருந்து நிலையத்தில் இருவரும் நிற்பதை கண்ட தனிப்படை போலீசார், உடனடியாக அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவர் அழைத்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஹரியை கைது செய்த சூலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...