சூலூரில் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - பொதுமக்கள் திடீர் சாலைமறியல்!

சூலூர் பகுதியில் நேற்றைய தினம் பெய்த கனமழையின் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளித்த நிலையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மழைநீர் வடிகால் அமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: சூலூர் அருகே கனமழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக அங்குள்ள சந்தைப் பகுதியில் மழைநீர் தேங்கி தெருக்கள் முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளித்தது.

கனமழையால் அப்பகுதியில் உள்ள வீடுகளிலும் மழைநீர் புகுந்து தேங்கியது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் சூலூர் தாலுகா அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பேசிய போராட்டக்காரர்கள், ஓராண்டுக்கு மேலாகியும் இந்த பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இதனால், மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.

இந்த பிரச்சனை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், வட்டாட்சியர் சுகுணா, கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) ஆனந்த் ஆரோக்கியராஜ் ஆகியோர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.

இதைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியலால் ரயில்வே பீட்டர் சாலை மற்றும் திருச்சி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து முடங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...