சூலூரில் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - பொதுமக்கள் திடீர் சாலைமறியல்!

சூலூர் பகுதியில் நேற்றைய தினம் பெய்த கனமழையின் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளித்த நிலையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மழைநீர் வடிகால் அமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: சூலூர் அருகே கனமழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக அங்குள்ள சந்தைப் பகுதியில் மழைநீர் தேங்கி தெருக்கள் முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளித்தது.

கனமழையால் அப்பகுதியில் உள்ள வீடுகளிலும் மழைநீர் புகுந்து தேங்கியது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் சூலூர் தாலுகா அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பேசிய போராட்டக்காரர்கள், ஓராண்டுக்கு மேலாகியும் இந்த பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இதனால், மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.

இந்த பிரச்சனை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், வட்டாட்சியர் சுகுணா, கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) ஆனந்த் ஆரோக்கியராஜ் ஆகியோர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.

இதைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியலால் ரயில்வே பீட்டர் சாலை மற்றும் திருச்சி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து முடங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...