கோவை இடையர்பாளையத்தில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

இடையர்பாளையம் பகுதியில் திமுக, அஇஅதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் கவுண்டம்பாளையம் மண்டல தலைவர் விஜயகாண்டீபன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர்.



கோவை: கவுண்டம்பாளையம் பாஜக மண்டல அலுவலகத்தை மண்டல தலைவர் விஜயகாண்டீபன் திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் இடையர்பாளையம் பகுதியில், திமுக, அஇஅதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் கவுண்டம்பாளையம் மண்டல தலைவர் விஜயகாண்டீபன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர். அவர்களுக்கு அடையாள அட்டையை வழங்கி விஜயகாண்டீபன் வரவேற்றார்.



இதைத் தொடர்ந்து கவுண்டம்பாளையம் மண்டல புதிய அலுவலகத்தையும் திறந்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக மாநிலத் துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி மற்றும் கோவை மாநகர மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.



முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாநிலத் துணைத் தலைவர் மற்றும் மாவட்டத் தலைவர்களுக்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பு வழங்கினர். தொடர்ந்து இடையர் பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்தனர். அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் பீரித்திலட்சுமி, திருநாவுக்கரசு, கோபிநாத், ரமேஷ், பொருளாளர் செந்தில்குமார், மண்டல பொதுச்செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், ரமேஷ், மண்டல பொருளாளர் சுரேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் அசோக்குமார் மற்றும் மாவட்ட, மண்டல அணி பிரிவு நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...