கோவை இடையர்பாளையத்தில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

இடையர்பாளையம் பகுதியில் திமுக, அஇஅதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் கவுண்டம்பாளையம் மண்டல தலைவர் விஜயகாண்டீபன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர்.



கோவை: கவுண்டம்பாளையம் பாஜக மண்டல அலுவலகத்தை மண்டல தலைவர் விஜயகாண்டீபன் திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் இடையர்பாளையம் பகுதியில், திமுக, அஇஅதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் கவுண்டம்பாளையம் மண்டல தலைவர் விஜயகாண்டீபன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர். அவர்களுக்கு அடையாள அட்டையை வழங்கி விஜயகாண்டீபன் வரவேற்றார்.



இதைத் தொடர்ந்து கவுண்டம்பாளையம் மண்டல புதிய அலுவலகத்தையும் திறந்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக மாநிலத் துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி மற்றும் கோவை மாநகர மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.



முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாநிலத் துணைத் தலைவர் மற்றும் மாவட்டத் தலைவர்களுக்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பு வழங்கினர். தொடர்ந்து இடையர் பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்தனர். அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் பீரித்திலட்சுமி, திருநாவுக்கரசு, கோபிநாத், ரமேஷ், பொருளாளர் செந்தில்குமார், மண்டல பொதுச்செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், ரமேஷ், மண்டல பொருளாளர் சுரேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் அசோக்குமார் மற்றும் மாவட்ட, மண்டல அணி பிரிவு நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...