இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) தென்பிராந்திய நிர்வாகிகள் தேர்வு!

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தென்பிராந்திய நிர்வாகிகள் தேர்வில், தலைவராக ‘வோல்வோ’ இந்தியா குழும நிர்வாக இயக்குநர் கமல் பாலி, துணைத் தலைவராக கோவை சந்திரா டெக்ஸ்டைல்ஸ், நிர்வாக இயக்குநர் நந்தினி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) தென்பிராந்திய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ‘சிஐஐ’ அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தென்பிராந்திய நிர்வாகிகள் தேர்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், தலைவராக ‘வோல்வோ’ குழுமம் இந்தியா நிர்வாக இயக்குநர் கமல் பாலியும், துணைத் தலைவராக கோவை சந்திரா டெக்ஸ்டைல்ஸ், நிர்வாக இயக்குநர் நந்தினியும் தேர்வு செய்யப்பட்டனர்.

சிஐஐ தமிழ்நாடு தலைவர், சிஐஐ இந்தியாவின் பெண்கள் பிரிவு தலைவர், திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின்(என்ஐடி) ஆளுநர்கள் குழுவின் உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகள் வகித்த நந்தினி, தற்போது தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (டிட்கோ) தனி இயக்குநராக உள்ளார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...