குடிநீர் குழாய் உடைப்பால் கோவையில் மார்ச் 26,27 குடிநீர் வினியோகம் தடை - மாநகராட்சி ஆணையர் தகவல்!

பிரதான நீரேற்று குழாயில் உடைப்பு காரணமாக மார்ச் 26, 27ஆம் தேதிகளில் கோவை சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், பீளமேடு, சவுரிபாளையம், ஆவாரம்பாளையம், கணபதி, காந்திபுரம், ரத்தினபுரி, சித்தாபுதூர் மற்றும் உக்கடம் பகுதியில் குடிநீர் வினியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் பிரதாப் தகவல்.


கோவை: மாநகாட்சிக்கு குடிநீர் வழங்கும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், இரண்டு நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் குடிநீர் திட்டம் II-ல் வெள்ளியங்காடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில் முத்துக்கல்லூர் பகுதியில் பிரதான நீரேற்று குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் பில்லூர் திட்டம் II-ன் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும் சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், பீளமேடு, சவுரிபாளையம், ஆவாரம்பாளையம், கணபதி, காந்திபுரம், ரத்தினபுரி, சித்தாபுதூர் மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் 26,27ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது.

எனவே பொதுமக்கள் சிரமத்தினை பொறுத்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...