ஆனைமலை புலிகள் காப்பக சாலையில் சிறுத்தைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை!

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள டாப்சிலிப் - பரமக்குளம் இடையேயான சாலையில் சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக, அவ்வழியாக செல்லும் வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க வனத்துறை அறிவுறுத்தல்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக சாலையில் சிறுத்தை நடமாட்டத்தால், வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி மற்றும் உடுமலை அமராவதி என ஆறு வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடு மற்றும் மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளும் மற்றும் அரிய வகை பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.



தற்போது, கோடை காலம் துவங்கியுள்ளதால் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டு கிடப்பதால் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றன.



இந்நிலையில் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கும் கேரளா வனப்பகுதியான ஆணைப்பாடி எல்லைப் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சாலையோரத்தில் வந்துள்ளது இதை அவ்வழியாகச் சென்ற சுற்றுலா பயணி ஒருவர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.



மேலும் இந்த வீடியோவை கண்ட வனத்துறையினர் பரம்பிக்குளம் செல்லும் சுற்றுலா பயணிகள் வழிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருக்க ஆனைமலை புலிகள் காப்பக வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...