வால்பாறையில் தவக்காலத்தையோட்டி கருமலை மாதாகோவில் வரை கிறிஸ்தவர்கள் நடைபயணம்

வால்பாறையில், ஈஸ்டர் தினத்தையொட்டி நடைபெறும் தவக்கால பிரார்த்தனைக்காக 12 கிலோமீட்டர் தொலைவு வரை கிறிஸ்தவர்கள் நடைபயணம் செய்து கருமலை மாதாகோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் 12 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு, கருமலை மாதாகோவிலில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

கிறிஸ்தவர்கள் வரும் 9ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நாளை ஈஸ்டர் தினமாக கொண்டாடுகின்றனர். இதற்கு முன்னதாக 50 நாட்கள் தவம் இருந்து கொண்டாடுகின்றனர்.



இந்த தவக்கால நாட்களில் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவ. ஆலயங்களில். விசேஷமான ஆராதனைகளும் திருப்பலிகளும் நடைபெறும். இதேபோல் வால்பாறையில் உள்ள திரு இருதய ஆலய பங்கு தந்தை ஜெகன் ஆண்டனி தலைமையில் ஒவ்வொரு நாட்களிலும் திருப்பலியும், ஆராதனையும், சிலுவைப்பாதையும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.



மேலும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வரும் தவக்கால சிலுவைப்பாதை இந்த ஆண்டு இன்று காலை ஒன்பது மணிக்கு வால்பாறை. திரு இருதய ஆலயத்திலிருந்து புறப்பட்டு 12 கிலோமீட்டர் தூரம் 14 இடங்களில் கிருஸ்துவின் திருப்பாடுகளை நினைத்து பார்த்து சிறப்பு பிராத்தனைகள் நடத்தினர்.



இதனையடுத்து, கருமலை அன்னை வேளாங்கண்ணி ஆலயம் சென்று அங்கு ஜெகன் ஆன்டணி தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...