ஈஷா யோக மையத்தில் பிரதமர் பயணம் செய்ய உள்ள விமானப்படை ஹெலிகாப்டர் தரையிறங்கும் ஒத்திகை நடத்தப்பட்டது.


கோவை ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயரத்திலான ஆதியோகி சிலை திறப்பு விழா மற்றும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 24ம் தேதி கோவை வர உள்ளார். இதனை முன்னிட்டு ஈஷா யோக மையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான ஒத்திகையும் நடைபெற்றது.

கோவை ஈஷா யோக மையத்தில் உலகிலேயே மிக உயரமான சுமார் 112 அடியில் ஆதியோகியான சிவபெருமானின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவானது வருகிற 24ம் தேதி மகா சிவாராத்திரியன்று நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்று சிலையை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி கோவை வர உள்ளார். அவருடன் பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களும் அன்றைய தினம் ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க உள்ளனர். 

இதனையடுத்து ஈஷா யோக மையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் மத்திய சிறப்பு பாதுகாப்பு குழுவினர் ஈஷா மையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி உச்சகட்ட பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி,கோவை சரக காவல்துறை துணை தலைவர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்ய பாரதி உள்ளிட்டோர் ஈஷா யோக மையம் மற்றும் மஹா சிவராத்திரி நிகழ்ச்சி நடைபெறும் மைதானம்,வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். 

அதேபோல் இந்திய விமானப்படை வீர்ர்கள் உதவியுடன் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு அருகிலேயே ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டு, விமானப்படை அதிகாரிகள், தேசிய சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகள், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பிரதமர் பயணம் செய்ய உள்ள விமானப்படை ஹெலிகாப்டர் தரையிறங்கும் ஒத்திகையும் நடத்தப்பட்டது.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...