கொளுத்தும் கோடை வெயில் - உடுமலையில் மண்பானை விற்பனை ஜோர்!

கூஜா, ஜாடி, உருண்டை வடிவம், பழைய செம்பு பானை வடிவம், குழாய் பொருத்தியது உள்ளிட்ட மண்பானைகள், 10 லிட்டர் முதல் 30 லிட்டர் கொள்ளளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வடிவம் மற்றும் கொள்ளளவு அடிப்படையில் 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பதாக உடுமலை மண்பானை வியாபாரிகள் தெரிவித்தனர்.



திருப்பூர்: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பிற்பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துவருகிறது. இதனால் வீடுகளில் இருப்பவர்கள், வாகன ஓட்டிகள் என பலதரப்பட்ட மக்களும் வெப்பத்தின் தாக்கத்தால் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.

உடல் சூட்டை சீராக்கும் வகையில், இளநீர், பழச்சாறு உள்ளிட்டவைகளை மக்கள் நாடத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், குளிர்ந்த தண்ணீரை குடிப்பதற்காக, உடுமலைப் பகுதி மக்கள், மண்பானைகள் அதிகம் வாங்கத் தொடங்கியுள்ளனர்.



இதையொட்டி, உடுமலையில் தண்ணீர் பானைகள் கூஜா, ஜாடி, உருண்டை வடிவம், பழைய செம்பு பானை வடிவம், குழாய் பொருத்திய மண்பானை என பல்வேறு வடிவங்களில் மண்ணால் ஆன பாத்திரங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.



10 லிட்டர் முதல் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட பானைகள் வடிவம் மற்றும் கொள்ளளவு அடிப்படையில் 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இது குறித்து மண்பானை விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வீடு, அலுவலகம், நிறுவனங்களுக்கு என பொதுமக்கள் மண்பானைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் 100 பானைகள் விற்பனையாகிறது, என்றார்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...