மேட்டுப்பாளையத்தில் சாலை பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து!

மேட்டுப்பாளையம் அருகே எஸ்.எம் நகர் முதல் பத்ரகாளியம்மன் கோவில் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால், அரசு பேருந்து ஒன்று பள்ளத்தில் சிக்கியது. இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து வனபத்திர காளியம்மன் கோவிலுக்கு சென்ற அரசு பேருந்து ஒன்று பள்ளத்தில் சிக்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட எஸ்.எம் நகர் முதல் பத்ரகாளியம்மன் கோவில் வரை செல்லும் சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும், குழியுமாக சிதிலம் அடைந்து காணப்படுகின்றன.

இந்த சாலையில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் சாந்திவனம் உள்ளது. இதனால் தினமும் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பலர் வந்து செல்கின்றனர்.

இதுதவிர மற்ற வாகன போக்குவரத்தும் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக இந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் இந்த சாலையானது பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக இருப்பதால் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

3 நாட்களுக்கு ஒருமுறை மோட்டார் சைக்கிள்கள், கனரக வாகனங்கள், ஆட்டோ, கார் மற்றும் அரசு பேருந்துகள் சாலையில் உள்ள குழிகளில் விழுந்து சிக்கி அவ்வப்போது போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி வருவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது.



இதனிடையே சம்பவத்தன்று மேட்டுப்பாளையத்திலிருந்து வனபத்திர காளியம்மன் கோவிலுக்கு சென்ற அரசு பேருந்து ஒன்று எஸ்.எம்.நகரில் உள்ள சாலை பள்ளத்தில் சிக்கியது. இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து சாலை மிகவும் மோசமாக உள்ள தால் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வானதி சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு: கோவை வடக்கில் அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம்

கோவை வடக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தீவிர பிரச்சாரத்தால் காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள்...

ரூ.760 கோடி மதிப்பீட்டில் 1700 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டது: செந்தில் பாலாஜி

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் Stalin ஆட்சியில் ரூ.760 கோடி மதிப்ப...

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...