கோவையில் செருப்புக் குடோனில் பயங்கர தீவிபத்து - பல லட்சம் ரூபாய் இழப்பு!

கோவை டவுன்ஹால் ஒப்பணைக்காரர் வீதியில் திவாக் பிரசாத் பாரிக் என்பவரின் செருப்பு கடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.


கோவை: கோவை ஆர்.எஸ். புரத்தை சேர்ந்தவர் திவாக் பிரசாத் பாரிக். இவர் கோவை டவுன்ஹால் ஒப்பணைக்காரர் வீதியில் சொந்தமாக விளையாட்டு வீரர்களுக்கான ஷூ மற்றும் உபகரணங்கள், செருப்பு கடை மற்றும் குடோன் வைத்து நடத்தி வருகிறார். இரவில் வியாபாரத்தை முடித்துவிட்டு தரைத்தளத்தில் உள்ள குடோனில் இவர் தூங்குவது வழக்கம்.

இந்த நிலையில், நேற்றிரவு இவர் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டிவிட்டு குடோனில் படுக்க சென்றார். அப்போது குடோனிலிருந்து புகை வெளியேறியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், குடோனை விட்டு வெளியேறினார்.



அப்போது, குடோனில் தீ பற்றி மளமளவென எரிந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து உடனடியாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.



அதன் பேரில் சம்பவ இடத்துக்கு ஒரு தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



தீ கட்டுக்கடங்காமல் குடோனில் இருந்து செருப்பு கடைக்கும் பரவியது. இதனால் 3 மாடி கொண்ட கட்டிடம் முழுவதும் தீ பயங்கரமாக எரிந்தது. அதே கட்டிடத்தில் இருந்த கோல்டு கம்பெனி மற்றும் பைனான்ஸ் நிறுவனத்திலும் தீ பற்றியது.

இதனால் அங்கு கூடுதலாக மேலும் 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

மேலும் அங்கு தண்ணீர் பீரங்கி வாகனம் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிளான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. சம்பவம் குறித்து பெரியகடை வீதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...