ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு - வர்க்கி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தயாரிக்கப்படும் திண்பண்டங்களில் ஒன்றான ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும், தமிழகத்தின் பாரம்பரியமான உணவுப் பொருட்களான மணப்பாறை முறுக்கு ஆகியவற்றுடன் மானாமதுரை கடம், மயிலாடி கல்சிற்பங்கள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.


நீலகிரி: தமிழகத்தின் பாரம்பரியமான உணவுப் பொருட்களான ஊட்டி வர்க்கி, மணப்பாறை முறுக்கு ஆகியவற்றுடன் மானாமதுரை கடம், மயிலாடி கல்சிற்பங்கள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. பல கட்ட ஆய்வுக்குப் பின், கடந்த நவ.,30 புவிசார் குறியீடு இதழில், ஊட்டி வர்க்கிக்கு, புவிசார் குறியீடுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிக்கை வெளியானதிலிருந்து, நான்கு மாதங்களுக்குள் அதாவது மார்ச் 30க்குள் இதற்கு ஆட்சபேம் எழுந்தால், அந்த விண்ணப்பம் மறுபரிசீலனைக்கு உள்ளாகும். இல்லாவிடில், அந்தப் பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு விடும். அந்த வகையில், வரும் மார்ச் 31 லிருந்து, ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு என்கிற மகத்தான அங்கீகாரம் கிடைக்கவுள்ளது.

புவிசார் குறியீடு, ஊட்டி வர்க்கிக்குக் கிடைப்பது, ஊட்டியின் பாரம்பரியத்துக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் ஊட்டியைத் தவிர, வேறு எங்கு தயாரிக்கப்படும் வர்க்கியையும் ஊட்டி வர்க்கி என்ற பெயரில் விற்பனை செய்வதை, சட்டப்பூர்வமாகத் தடுக்க முடியும்.

இதற்காக பெருமுயற்சி எடுத்த வர்க்கி உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் முகம்மது பரூக் கூறுகையில், ''ஊட்டி வர்க்கிக்குக் கிடைக்கும் இந்த அங்கீகாரம், பெருமகிழ்ச்சியைத் தருகிறது. இதைத் தரமாகத் தயாரிக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வை இந்த அங்கீகாரம் கொடுத்துள்ளது. ஏற்கனவே, குறியீடு பெற்றுள்ள ஊட்டி டீயுடன் வர்க்கியும் சேர்வது, இணையற்ற சுவையாக அமையவுள்ளது,'' என்றார்.

மொறுமொறு மணப்பாறை முறுக்கு, ஊட்டி வர்க்கியுடன் சேர்த்து, அதே நாளில் மணப்பாறை முறுக்குக்கும் புவிசார் குறியீடு கிடைக்கவுள்ளது. இது, தமிழகத்தின் பாரம்பரிய உணவுப் பொருளுக்கான பெருமையை உலகறியச் செய்யும்.

இவற்றுடன் மண் பாண்டத்துக்குப் பெயர்பெற்ற மானாமதுரையில் தயாரிக்கப்படும் இசைக்கருவியான கடம், குமரி மாவட்டத்தில் தயாராகும் கைவினைப் பொருளாகிய மயிலாடி கல் சிற்பங்கள் ஆகியவற்றுக்கும் அதே நாளில் புவிசார் குறியீடு என்ற பெருமை கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...