உடுமலை அருகே இறந்த சலங்கை மாட்டிற்கு பூஜை செய்து வழிப்பட்ட மக்கள்

உடுமலை அருகே லிங்கம்மாவூரில் சலங்கை மாடு இறந்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சலங்கை மாட்டிற்கு பூஜை செய்து வழிபாடு செய்து, ஊருக்கு பொதுவான கோவில் அருகே அடக்கம் செய்யப்பட்டது.


திருப்பூர்: உடுமலை அருகே இறந்த சலங்கை மாட்டுக்கு பூஜை செய்து பொதுமக்கள் அடக்கம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொங்கல் அன்று பிறந்த கன்றுகளை சோமவாரபட்டியில் உள்ள ஆல்கொண்டமால் கோவிலுக்கு நேர்த்தி கடனாக செலுத்துகின்றனர்.

காளை கன்றுகளை தேர்வு செய்து தெய்வமாக கருதி ஊர் மக்கள் வளர்க்கின்றனர். சலங்கை மாடுகளுக்கு இசைக்கு ஏற்ப ஆடும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் கைகளில் கம்புகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு காலில் சலங்கை கட்டிக்கொண்டு உருமி இசைக்கு ஏற்ப மாடுகளுக்கு முன்னால் சென்று ஆடுகின்றனர். மாடுகளும் இசைக்கேற்ப தலையை ஆட்டி ஆடுகின்றன.

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பாரம்பரிய நடனமாக இது நடைபெற்று வருகிறது. மாட்டுப்பொங்கலன்று சலங்கை மாடுகளுக்கு பூஜை செய்து வழிபாடு செய்வது வழக்கம்.



கொங்கல் நகரம் அருகே உள்ள லிங்கம்மாவூரில் சலங்கை மாடு இறந்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சலங்கை மாட்டிற்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். இளைஞர்கள் உருமி இசைக்கேற்ப தேவர் ஆட்டம் ஆடினர். அதனைத் தொடர்ந்து மாடு ஊருக்கு பொதுவான கோவிலில் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...