உடுமலை அருகே இறந்த சலங்கை மாட்டிற்கு பூஜை செய்து வழிப்பட்ட மக்கள்

உடுமலை அருகே லிங்கம்மாவூரில் சலங்கை மாடு இறந்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சலங்கை மாட்டிற்கு பூஜை செய்து வழிபாடு செய்து, ஊருக்கு பொதுவான கோவில் அருகே அடக்கம் செய்யப்பட்டது.


திருப்பூர்: உடுமலை அருகே இறந்த சலங்கை மாட்டுக்கு பூஜை செய்து பொதுமக்கள் அடக்கம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொங்கல் அன்று பிறந்த கன்றுகளை சோமவாரபட்டியில் உள்ள ஆல்கொண்டமால் கோவிலுக்கு நேர்த்தி கடனாக செலுத்துகின்றனர்.

காளை கன்றுகளை தேர்வு செய்து தெய்வமாக கருதி ஊர் மக்கள் வளர்க்கின்றனர். சலங்கை மாடுகளுக்கு இசைக்கு ஏற்ப ஆடும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் கைகளில் கம்புகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு காலில் சலங்கை கட்டிக்கொண்டு உருமி இசைக்கு ஏற்ப மாடுகளுக்கு முன்னால் சென்று ஆடுகின்றனர். மாடுகளும் இசைக்கேற்ப தலையை ஆட்டி ஆடுகின்றன.

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பாரம்பரிய நடனமாக இது நடைபெற்று வருகிறது. மாட்டுப்பொங்கலன்று சலங்கை மாடுகளுக்கு பூஜை செய்து வழிபாடு செய்வது வழக்கம்.



கொங்கல் நகரம் அருகே உள்ள லிங்கம்மாவூரில் சலங்கை மாடு இறந்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சலங்கை மாட்டிற்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். இளைஞர்கள் உருமி இசைக்கேற்ப தேவர் ஆட்டம் ஆடினர். அதனைத் தொடர்ந்து மாடு ஊருக்கு பொதுவான கோவிலில் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...