பல்லடம் அருகே வடமாநில இளைஞரை கடத்திய ஒடிசா பெண் கைது!

பல்லடம் அருகே சின்னக்கரையில் வேலை கேட்பது போல் நடித்து வட மாநில வாலிபரை கடத்தி 40 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த வடமாநில பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே வேலை கேட்பது போன்று நடித்து ரூ.40 ஆயிரம் பணம் பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த பஜுலு மண்டல் என்பவரது மகன் ஷாஜி மண்டல். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்றுமுன்தினம் இரவு இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வடமாநில பெண் ஒருவர், வேலை இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், வேலை இருந்தால் தெரிவிக்குமாறும், பண உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு உதவி செய்வதாக கூறியதை அடுத்து, அந்த பெண், ஷாஜி மண்டலை சின்னக்கரை பேருந்து நிலையம் அருகே வரச் சொல்லியுள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம ஆசாமிகள் ஷாஜி மண்டலை கடத்திச் சென்றுள்ளனர்.

மேலும் 40 ஆயிரம் ரூபாய் பணம், பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அவரை திருப்பூர் அரசு மருத்துவமனை அருகே இறக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.



இது குறித்து ஷாஜி மண்டல் பல்லடம் காவல்துறையில் புகார் அளித்ததன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் பேசிய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அஜித் என்பவரது மனைவி சுக்லாவை கைது செய்து, விசாரணை செய்தபோது அந்த பெண்ணும், அவருடன் வந்த நான்கு பேரும் சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...