உடுமலை அருகே தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள் - இழப்பீடு வழங்க கோரிக்கை

உடுமலை அருகே 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதாக கோரியும், இழப்பீடு வழங்க கோரியும் விவசாயிகள் சங்கம் சார்பில் உடுமலை கோட்டாச்சியர் ஜஸ்வந்த் கண்ணனிடம் மனு அளிக்கப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே யானைகள் சேதப்படுத்திய தென்னை மரங்களுக்கு இழப்பிடு வழங்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் கோட்டாச்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி நகர், பொன்னாளம்மன் சோலை, வளையபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.



இந்நிலையில் இன்று விளைநிலத்திலிருந்த 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அடியோடு சாய்த்து யானைகள் சேதப்படுத்தி உள்ளது.



இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வனப்பகுதியை ஓட்டிய கிராமங்களாக இருப்பதால் வனத்துறையினரிடம் பலமுறை யானைகளை விரட்ட கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.



இதனால் இன்று தோட்டத்தில் புகுந்த யானைகள் 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட வனத்துறையினர் இப்பகுதியில் உடனே போர்க்கால அடிப்படையில் குழு அமைத்து சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும், என்றனர்.

இதற்கிடையில் விவசாயிகள் சங்கம் சார்பில் கோட்டாச்சியர் ஜஸ்வந்த்கண்ணனிடம் இழப்பீடு வழங்க கோரி மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...