உடுமலை அருகே தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள் - இழப்பீடு வழங்க கோரிக்கை

உடுமலை அருகே 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதாக கோரியும், இழப்பீடு வழங்க கோரியும் விவசாயிகள் சங்கம் சார்பில் உடுமலை கோட்டாச்சியர் ஜஸ்வந்த் கண்ணனிடம் மனு அளிக்கப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே யானைகள் சேதப்படுத்திய தென்னை மரங்களுக்கு இழப்பிடு வழங்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் கோட்டாச்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி நகர், பொன்னாளம்மன் சோலை, வளையபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.



இந்நிலையில் இன்று விளைநிலத்திலிருந்த 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அடியோடு சாய்த்து யானைகள் சேதப்படுத்தி உள்ளது.



இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வனப்பகுதியை ஓட்டிய கிராமங்களாக இருப்பதால் வனத்துறையினரிடம் பலமுறை யானைகளை விரட்ட கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.



இதனால் இன்று தோட்டத்தில் புகுந்த யானைகள் 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட வனத்துறையினர் இப்பகுதியில் உடனே போர்க்கால அடிப்படையில் குழு அமைத்து சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும், என்றனர்.

இதற்கிடையில் விவசாயிகள் சங்கம் சார்பில் கோட்டாச்சியர் ஜஸ்வந்த்கண்ணனிடம் இழப்பீடு வழங்க கோரி மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...