மனு அளிக்க வந்த மக்களை காக்க வைத்த விவகாரம் - தாராபுரத்தில் பெண் வருவாய் ஆய்வாளர் இடமாற்றம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களை கண்டுகொள்ளாமல், உயர்அதிகாரிக்கு மதிய உணவு ஆர்டர் செய்த வீடியோ வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட பெண் வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம், அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தனலட்சுமி. இவர் கடந்த 17-ந் தேதி அலுவலகத்தில் பணியில் இருந்தார். அவரை சந்தித்து மனு கொடுக்க பொதுமக்கள் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

அப்போது அவருக்கு உயர் அதிகாரியிடம் இருந்து போன் வந்தது. இதையடுத்து, தனலட்சுமி, தனியார் ஓட்டலில் உயர்அதிகாரிக்கு உணவு வாங்கி வரும்படி உணவு பட்டியலை உதவியாளரிடம் கொடுத்து அனுப்பினார்.

பின்னர் ஓட்டலுக்கு சென்ற உதவியாளரிடம் செல்போனில் உணவு வகைகள் குறித்து ஒன்றன்பின் ஒன்றாக கூறிக்கொண்டே இருந்துள்ளார்.



இதனால் மனுகொடுக்க வந்த மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டதால் அதிருப்தி அடைந்ததோடு, தனலட்சுமியின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாகப் பரவியது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், தாராபுரம் வருவாய் ஆய்வாளர் தனலட்சுமியை அலங்கியம் வருவாய் கிராமத்துக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

அலங்கியம் பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த சரவணனை தாராபுரத்துக்கு நியமித்து உத்தரவிட்டார். மனு கொடுக்க வந்த பொதுமக்களை காக்க வைத்துவிட்டு, உயர் அதிகாரிக்கு உணவு ஆர்டர் செய்ததாக பெண் வருவாய் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...