மார்ச் 24-ம் தேதி அன்று ரமலான் பிறை 1 - கோவை ஹிலால் கமிட்டி அறிவிப்பு

தமிழகத்தில் எங்கும் ரமலான் பிறை தெரியவில்லை. இந்த மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ரமலான் பிறை 1 என அறிவிப்பதாக, கோவை ஹிலால் கமிட்டி தெரிவித்துள்ளது.


கோவை: கோயமுத்தூர் ஹிலால் கமிட்டியின் ரமலான் பிறை பார்க்கும் கூட்டம், உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அஹ்லே சுன்னத்வல் ஜமாஅத் மஸ்ஜித் பள்ளிவாசலில் நடைபெற்றது.

பிறை தென்படவில்லை என்று பிறை பார்க்கும் குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் இந்தியாவின் பல்வேறு தலைநகரங்களிலும் பிறை தென்படவில்லை. எனவே நாளை வெள்ளிக்கிழமையை ரமலான் பிறை 1 என கடைப்பிடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.



பிறை பார்க்கும் விழா கமிட்டியின் கோவை மாவட்ட தலைவர் ரஹீம் அஜரத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை கமிட்டியின் பிறை பார்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பள்ளி வாசல்களில் நடைபெற்று பிறை சம்பந்தப்பட்ட முடிவுகளை தீர்மானிக்கும் ஒரு கமிட்டியாக செயல்பட்டு வருகிறது.

ரமலான் பண்டிகையின் பிறை பார்க்கும் கூட்டம் நடைபெற்றது. பிறை சம்பந்தமான தகவல்களை தமிழகத்தினுடைய பல பகுதிகளிலும் உறுதி செய்வதற்காக விசாரித்தோம், தொடர்பு கொண்டோம்.

இந்தியாவின் ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் சென்னை போன்ற தலைநகரங்களிலும் தமிழகத்தினுடைய எந்த மாவட்டங்களிலும் பிறை தென்படவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

இறுதியாக தமிழகத்தினுடைய தலைமை காசிர் அறிவிப்பை எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர்களும் இறுதியாக தமிழகத்தில் எங்கும் ரமலான் பிறை தெரியவில்லை என கூறியுள்ளார். எனவே இதன் காரணமாக இந்த மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ரமலான் பிறை 1 என அறிவிக்கப்படுகிறது என கோவை ஹிலால் கமிட்டி சார்பில் அறிவிக்கின்றோம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...