மார்ச் 24-ம் தேதி அன்று ரமலான் பிறை 1 - கோவை ஹிலால் கமிட்டி அறிவிப்பு

தமிழகத்தில் எங்கும் ரமலான் பிறை தெரியவில்லை. இந்த மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ரமலான் பிறை 1 என அறிவிப்பதாக, கோவை ஹிலால் கமிட்டி தெரிவித்துள்ளது.


கோவை: கோயமுத்தூர் ஹிலால் கமிட்டியின் ரமலான் பிறை பார்க்கும் கூட்டம், உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அஹ்லே சுன்னத்வல் ஜமாஅத் மஸ்ஜித் பள்ளிவாசலில் நடைபெற்றது.

பிறை தென்படவில்லை என்று பிறை பார்க்கும் குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் இந்தியாவின் பல்வேறு தலைநகரங்களிலும் பிறை தென்படவில்லை. எனவே நாளை வெள்ளிக்கிழமையை ரமலான் பிறை 1 என கடைப்பிடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.



பிறை பார்க்கும் விழா கமிட்டியின் கோவை மாவட்ட தலைவர் ரஹீம் அஜரத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை கமிட்டியின் பிறை பார்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பள்ளி வாசல்களில் நடைபெற்று பிறை சம்பந்தப்பட்ட முடிவுகளை தீர்மானிக்கும் ஒரு கமிட்டியாக செயல்பட்டு வருகிறது.

ரமலான் பண்டிகையின் பிறை பார்க்கும் கூட்டம் நடைபெற்றது. பிறை சம்பந்தமான தகவல்களை தமிழகத்தினுடைய பல பகுதிகளிலும் உறுதி செய்வதற்காக விசாரித்தோம், தொடர்பு கொண்டோம்.

இந்தியாவின் ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் சென்னை போன்ற தலைநகரங்களிலும் தமிழகத்தினுடைய எந்த மாவட்டங்களிலும் பிறை தென்படவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

இறுதியாக தமிழகத்தினுடைய தலைமை காசிர் அறிவிப்பை எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர்களும் இறுதியாக தமிழகத்தில் எங்கும் ரமலான் பிறை தெரியவில்லை என கூறியுள்ளார். எனவே இதன் காரணமாக இந்த மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ரமலான் பிறை 1 என அறிவிக்கப்படுகிறது என கோவை ஹிலால் கமிட்டி சார்பில் அறிவிக்கின்றோம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...