உடுமலையில் நேதாஜி மைதானத்தை பாரமரிக்க கோரிக்கை

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கட்டுப்பாட்டில் நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தற்போது இந்த மைதானம் குண்டும், குழியுமாக உள்ளதால், அதை பராமரிக்கை கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: உடுமலையில் குண்டும் குழியுமாக உள்ள நேதாஜி மைதானத்தை பாரமரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கட்டுப்பாட்டில் நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து, ஸ்கேட்டிங், கிரிக்கெட், ஹாக்கி, ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்க ஆயுத்தமாகும் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ- மாணவியர்கள் நாள்தோறும் காலை மற்றும் மாலையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் இரண்டு வேளையும் நடை பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக காலை மற்றும் மாலையில் மைதானம் பரபரப்பாக காணப்படும்.



இந்த சூழலில் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளத்தால் மைதானத்தின் தாழ்வான பகுதிகளில் பள்ளம் போன்ற அமைப்பு உருவாகி உள்ளது.



இதனால் குழந்தைகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

உடுமலையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நேதாஜி விளையாட்டு மைதானம் விளையாட்டு வீரர்களுக்கு மிகச்சிறந்த வரப்பிரசாதமாகும். இந்த மைதானத்தில் பயிற்சி எடுத்த ஏராளமானோர் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு உள்ளனர்.

அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் நாள்தோறும் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த சூழலில் இடைவிடாது பெய்த வடகிழக்கு பருவமழையால் மைதானத்தில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது ஆங்காங்கே வடிகால்கள் உற்பத்தியாகி தண்ணீர் சென்ற போது பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் குழந்தைகள் பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு செல்லும்போது தவறி விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் விளையாட்டில் கவனம் செலுத்தி சுதந்திரமாக பயிற்சி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் உருவாவது தடுக்கப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

எனவே நேதாஜி விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்டுள்ள மேடும் பள்ளமுமான பகுதியை பொக்லைன் எந்திரத்தின் மூலம் சமன்படுத்துவதற்கோ அல்லது மண்ணைக் கொட்டி சீரமைப்பதற்கோ நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...