உடுமலையில் நேதாஜி மைதானத்தை பாரமரிக்க கோரிக்கை

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கட்டுப்பாட்டில் நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தற்போது இந்த மைதானம் குண்டும், குழியுமாக உள்ளதால், அதை பராமரிக்கை கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: உடுமலையில் குண்டும் குழியுமாக உள்ள நேதாஜி மைதானத்தை பாரமரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கட்டுப்பாட்டில் நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து, ஸ்கேட்டிங், கிரிக்கெட், ஹாக்கி, ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்க ஆயுத்தமாகும் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ- மாணவியர்கள் நாள்தோறும் காலை மற்றும் மாலையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் இரண்டு வேளையும் நடை பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக காலை மற்றும் மாலையில் மைதானம் பரபரப்பாக காணப்படும்.



இந்த சூழலில் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளத்தால் மைதானத்தின் தாழ்வான பகுதிகளில் பள்ளம் போன்ற அமைப்பு உருவாகி உள்ளது.



இதனால் குழந்தைகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

உடுமலையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நேதாஜி விளையாட்டு மைதானம் விளையாட்டு வீரர்களுக்கு மிகச்சிறந்த வரப்பிரசாதமாகும். இந்த மைதானத்தில் பயிற்சி எடுத்த ஏராளமானோர் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு உள்ளனர்.

அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் நாள்தோறும் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த சூழலில் இடைவிடாது பெய்த வடகிழக்கு பருவமழையால் மைதானத்தில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது ஆங்காங்கே வடிகால்கள் உற்பத்தியாகி தண்ணீர் சென்ற போது பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் குழந்தைகள் பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு செல்லும்போது தவறி விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் விளையாட்டில் கவனம் செலுத்தி சுதந்திரமாக பயிற்சி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் உருவாவது தடுக்கப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

எனவே நேதாஜி விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்டுள்ள மேடும் பள்ளமுமான பகுதியை பொக்லைன் எந்திரத்தின் மூலம் சமன்படுத்துவதற்கோ அல்லது மண்ணைக் கொட்டி சீரமைப்பதற்கோ நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...