உடுமலையில் நேதாஜி மைதானத்தை பாரமரிக்க கோரிக்கை

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கட்டுப்பாட்டில் நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தற்போது இந்த மைதானம் குண்டும், குழியுமாக உள்ளதால், அதை பராமரிக்கை கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: உடுமலையில் குண்டும் குழியுமாக உள்ள நேதாஜி மைதானத்தை பாரமரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கட்டுப்பாட்டில் நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து, ஸ்கேட்டிங், கிரிக்கெட், ஹாக்கி, ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்க ஆயுத்தமாகும் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ- மாணவியர்கள் நாள்தோறும் காலை மற்றும் மாலையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் இரண்டு வேளையும் நடை பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக காலை மற்றும் மாலையில் மைதானம் பரபரப்பாக காணப்படும்.



இந்த சூழலில் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளத்தால் மைதானத்தின் தாழ்வான பகுதிகளில் பள்ளம் போன்ற அமைப்பு உருவாகி உள்ளது.



இதனால் குழந்தைகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

உடுமலையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நேதாஜி விளையாட்டு மைதானம் விளையாட்டு வீரர்களுக்கு மிகச்சிறந்த வரப்பிரசாதமாகும். இந்த மைதானத்தில் பயிற்சி எடுத்த ஏராளமானோர் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு உள்ளனர்.

அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் நாள்தோறும் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த சூழலில் இடைவிடாது பெய்த வடகிழக்கு பருவமழையால் மைதானத்தில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது ஆங்காங்கே வடிகால்கள் உற்பத்தியாகி தண்ணீர் சென்ற போது பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் குழந்தைகள் பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு செல்லும்போது தவறி விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் விளையாட்டில் கவனம் செலுத்தி சுதந்திரமாக பயிற்சி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் உருவாவது தடுக்கப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

எனவே நேதாஜி விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்டுள்ள மேடும் பள்ளமுமான பகுதியை பொக்லைன் எந்திரத்தின் மூலம் சமன்படுத்துவதற்கோ அல்லது மண்ணைக் கொட்டி சீரமைப்பதற்கோ நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...