யுகாதி பண்டிகை - திருப்பூர் கோவில்களில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு!

தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வாலிபாளையம் பகுதியில் உள்ள பழமையான சடையப்பன் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்து சென்று வழிபாடு செய்தனர்.



திருப்பூர்: யுகாதி பண்டிகையையொட்டி திருப்பூர் மாவட்டம் வாலிபாளையம் சடையப்பன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் சுமந்து சென்று வழிபாடு செய்தனர்.

யுகாதி என்று அழைக்கப்படும் பண்டிகை தெலுங்கு வருடப்பிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தெலுங்கு மொழி பேசும் மக்களால், இந்த பண்டிகை கோலாகலாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு யுகாதி பண்டிகையானது மார்ச் 22ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் துவங்கப்படும் காரியங்கள் பெரிய அளவில் வளர்ச்சியை கொடுக்கும் என்பதால் ஏராளமானோர் புதிய தொழில்களை இந்த நாளில் துவங்குவது வழக்கம்.



இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு வாலிபாளையம் பகுதியில் உள்ள பழமையான சடையப்பன் கோவிலில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானமக்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

இதனிடையே யுகாதி திருவிழாவை முன்னிட்டு வாலிபாளையம் பகுதியில் உள்ள சடையப்பன் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்று வழிபாடு செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...