கோத்தகிரி சோதனைச்சாவடிக்கு வந்த காட்டுயானை - உயிர் தப்பிய போலீசாரின் வைரல் வீடியோ!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி குஞ்சப்பனை சோதனை சாவடிக்கு வந்த ஒற்றை காட்டு யானையிடமிருந்து இரவு பணியில் இருந்த போலீசார் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கடந்த ஒரு மாத காலமாக ஆண் காட்டு யானை ஒன்று அவ்வப்போது உலா வருகிறது. இந்த யானை சில நேரங்களில் வாகனங்களை தாக்குவது, சாலையில் வாகனங்கள் செல்ல விடாமல் வழிமறிப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது.



இந்த யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், நேற்று இரவு கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மாநிலநெடுஞ்சாலையில் உள்ள குஞ்சப்பனை சோதனை சாவடிக்கு வந்தது.

அதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அச்சமடைந்து, அங்கிருந்த தற்காலிக செட்டிற்குள் சென்று சத்தமின்றி மறைந்து கொண்டனர்.

அங்கு சென்ற காட்டு யானை சோதனை சாவடியில் பறிமுதல் செய்து வைக்கபட்டிருந்த குடி நீர் பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்து மிதித்து சேதப்படுத்தியதோடு, நீண்ட நேரத்திற்கு பிறகு சோதனை சாவடியை விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Newsletter

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...