வால்பாறையில் காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு ஆலோசனை கூட்டம்!

வால்பாறையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாணவர்களை கண்காணிக்க வேண்டும், அவர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி பேராசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குறித்து பேராசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வால்பாறையில் காவல்துறை சார்பில் போதை பொருள் விற்பனை தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆய்வாளர் கற்பகம் மற்றும் துணை ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வால்பாறை அரசு கல்லூரியில் போதை பொருட்கள் ஒழிப்பு, தடுப்பது குறித்து காவல்துறை சார்பில் கல்லூரி பேராசிரியர்கள் இடையேயான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மாணவ, மாணவிகளின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். தனிமையில் இருக்கும் மாணவர்களின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். படிப்பிலும், விளையாட்டு போட்டிகளிலும் கவனம் செலுத்த வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் கல்லூரி முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்லூரியில் உள்ள அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...