வால்பாறையில் காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு ஆலோசனை கூட்டம்!

வால்பாறையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாணவர்களை கண்காணிக்க வேண்டும், அவர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி பேராசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குறித்து பேராசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வால்பாறையில் காவல்துறை சார்பில் போதை பொருள் விற்பனை தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆய்வாளர் கற்பகம் மற்றும் துணை ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வால்பாறை அரசு கல்லூரியில் போதை பொருட்கள் ஒழிப்பு, தடுப்பது குறித்து காவல்துறை சார்பில் கல்லூரி பேராசிரியர்கள் இடையேயான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மாணவ, மாணவிகளின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். தனிமையில் இருக்கும் மாணவர்களின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். படிப்பிலும், விளையாட்டு போட்டிகளிலும் கவனம் செலுத்த வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் கல்லூரி முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்லூரியில் உள்ள அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...