பணிக்கொடை வழங்காத தனியார் நிறுவனத்தை கண்டித்து கோவை வட்டாசியர் அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


30 ஆண்டுகளாக பணிக்கொடை வழங்காத தனியார் நிறுவனத்தைக் கண்டித்து அந்நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் கோவை தெற்கு வட்டாசியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவையில் செயல்பட்டு வந்த நவஇந்தியா நிறுவனம், நிர்வாக குறைபாடு காரணமாக மூடப்பட்டது. இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடையை வழங்காததால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து சில ஆண்டுகளுக்கு முன் 50 சதவிகித பணிக்கொடை வழங்கப்பட்டது. அதன் பிறகு வழங்க வேண்டிய மீதம் 50 சதவிகித தொகையை இது வரை வழங்காமல் அந்நிறுவனம் காலம் தாழ்த்துவதை கண்டித்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் இன்று கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நவஇந்தியா நிறுவனத்தில் பணியாற்றிய 180 ஊழியர்களுக்கு இது வரை முழுமையான பணிக்கொடை வழங்கவில்லை. அதில் சில ஊழியர்கள் தற்போது இறந்துவிட்டதால் அந்த தொகையை அவர்களது குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், எங்களது கோரிக்கைகளை ஏற்று நவஇந்தியா நிறுவனம் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடவுள்ளதாகவும், தொடர்ந்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...