குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்..! – கோவை ஆட்சியர் வலியுறுத்தல்!

கோவை நவஇந்தியாவில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு பயிலரங்கத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பள்ளிகளில் வருகையினை கண்காணிக்க வேண்டும் என்றார்.


கோவை: குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறையை ஒழிக்க பள்ளிகளில் மாணவர் வருகையை கண்காணிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் நவஇந்தியா எஸ்.என்.ஆர். கல்லூரியில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான கோவை மண்டல அளவிலான பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.



இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு நீதித்துறை பயிலக துணை இயக்குநர் ரிஷிரோஷன், தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் தமிழரசி, இணை ஆணையர் லீலாவதி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் துணை இயக்குநர் கலைமதி, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட திட்ட இயக்குநர் விஜயகுமார், தமிழ்நாடு கூட்டணி நிறுவன உறுப்பினர் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது, குழந்தை தொழிலாளர் (ஒழிப்பு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1966 ன்படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எவ்விதமான தொழிலிலும் ஈடுப்படுத்த கூடாது, 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுப்படுத்த கூடாது. குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்தும் நிறுவனத்தின் மீது குறைந்தபட்சம் 20,000 முதல் அதிகபட்சம் 50,000 வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி கல்லூரிகளில் மாணக்கர்களின் சேர்க்கை அதிகமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 2016 சட்ட திருத்திற்கு பிறகு குழந்தை தொழிலாளர் முறை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இம்முறையை ஒழிக்க பள்ளிகளில் வருகையினை கண்காணிக்க வேண்டும். தொடர்ச்சியாக பள்ளிக்கு வராமல் இருக்கும் குழந்தைகளின் விவரங்களை சேகரித்து, ஒருவேளை அவர்கள் ஏதாவது தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்தால், அவர்களை மீட்டு, அரசின் திட்டங்கள் மூலம் வாழ்வாதார பாதுகாப்பு அளிப்பதுடன், தொடர் கல்வி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு திட்டங்கள் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குடும்ப சூழ்நிலை காரணமாக மட்டுமின்றி ஒரு சில இடங்களில் கட்டாயப்படுத்தி குழந்தைகளை தொழிலாளராக பணி அமர்த்துவார்கள். இது குறித்து தகவல் அறிந்துவுடன், மிக கவனமாக செயல்பட்டு அந்த குழந்தைகளை மீட்க வேண்டும்.

குழந்தை தொழிலாளர் முறை மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் முற்றிலும் ஒழிக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை தொழிலாளர் தொடர்பான புகார்களை Pencil portal என்ற வலைதளத்திலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...