கோவை அருகே மின்கம்பத்தின் மீது கார் மோதி விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்!

விளாங்குறிச்சி அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் ஐடி ஊழியர்களை இறக்கி விட்டு சென்ற இன்னோவா கார், ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.



கோவை: கோவை மாவட்டம் விளாங்குறிச்சி அருகே கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

கோவை அடுத்த விளாங்குறிச்சி சாலை பால்காரர் தோட்டம் பேருந்து நிலையம் அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் இன்னோவா கார் ஒன்று ஐ.டி. நிறுவன ஊழியர்களை இறக்கி விட்டு திரும்பியுள்ளது.

அப்போது அந்த வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக தெரிகிறது.



அப்போது திடிரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில் மின் கம்பம் முறிந்து மின் கம்பிகள் துண்டானது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார். விபத்து நடந்தவுடன் மின் விநியோகம் உடனடியாக தடைபட்டதாலும், அதிகாலை நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.



இதையடுத்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், புதிய மின் கம்பிகளை மாற்றி, மின் கம்பத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...