கோவையில் அடுத்தடுத்து 8 கடைகளில் கொள்ளை - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

கோவை எட்டிமடை கடைத்தெருவில் உள்ள அடுத்தடுத்து 8 கடைகளின் பூட்டை உடைத்து பணம், மற்றும் சிசிடிவி ஹார்டுடிஸ்க்குகளை திருடிச் சென்ற மர்ம கும்பலை க.க.சாவடி போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவை க.க.சாவடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எட்டிமடை பகுதியில் உள்ள கடைத்தெருவில் அடுத்தடுத்து 8 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பணம் மற்றும் 3 கடைகளில் இருந்த சிசிடிவி பதிவு ஹார்டிஸ்க்குகளை திருடிச் சென்றுள்ளனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், எட்டிமடை பகுதியில் உள்ள எதிர் எதிரே அமைந்துள்ள 2 வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் பேக்கரி, போட்டோ ஸ்டுடியோ, செல்போன் கடை, ஹார்வேர்ஸ், சலூன், மளிகை கடை, பேன்ஸி கடை என அடுத்தடுத்து 8 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.45 ஆயிரம் பணம் மற்றும் சிசிடி ஹார்டுடிஸ்க்குகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கடைகளில் பதிவான கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். மேலும், இந்த திருட்டு சம்பவங்கள் அதிகாலை சுமார் காலை 4 மணி முதல் 5 மணிக்குள் நடத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டிமடை பகுதியில் அடுத்தடுத்து 8 கடைகளில் கைவரிசை காட்டிய மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொடர் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...